close
Choose your channels

பாபிசிம்ஹாவுடன் காதலா? ரேஷ்மி மேனனின் விளக்கம்

Saturday, July 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தேசிய விருது பெற்ற நடிகர் பாபிசிம்ஹாவுக்கும், அவருடன் உறுமீன்' படத்தில் நடித்து கொண்டிருக்கும் நடிகை ரேஷ்மா மேனனுக்கு காதல் என்றும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தது. இந்நிலையில் பாபிசிம்ஹா ஏற்கனவே இதுகுறித்து விளக்கம் அளித்துவிட்ட நிலையில் தற்போது ரேஷ்மா மேனனும் இதுகுறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.


இந்த வதந்தி குறித்து இப்போதைக்கு எந்தப் பதிலும் என்னிடம் இல்லை. இப்போதைக்கு எனக்கு படங்களில் நடித்து நல்ல பெயர் வாங்குவது மட்டும்தான் குறிக்கோள். இதுகுறித்து பேசுவதையே தவிர்க்கலாம் என நினைக்கின்றேன். நாளைக்கு வேறு ஒரு வதந்தி வந்தால், இந்த வதந்தியை மக்களே மறந்துவிடுவார்கள். இந்த வதந்தி குறித்து விளக்கம் அளித்து நான் அவர்களுக்கு மீண்டும் நினைவுபடுத்த விரும்பவில்லை' என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த பேட்டியில் தன்னை யாரும் இம்ப்ரஸ் செய்ய நினைத்தால் கொஞ்சம் கூட போலித்தனம் இல்லாமல் சிம்பிளாக இருந்தால் போதும்' என்று கூறியுள்ளார்.

மேலும் தற்போது உறுமீன் படத்தை தவிர, கிருமி, நட்பதிகாரம், மிஷ்கின் தயாரிக்கும் சவரக்கத்தி ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக கூறிய ரேஷ்மா மேனன், நயன்தாராவின் 'மாயா' படத்தில் யாரும் எதிர்பார்க்காத ஒரு ரோலில் நடித்துள்ளேன்' என்று சஸ்பென்ஸ் உடன் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.