close
Choose your channels

கொடைக்கானலில் த்ரிஷாவுக்கு ஏற்பட்ட பிரச்சனை என்ன? விவரிக்கின்றார் இயக்குனர்

Friday, September 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரொமான்ஸ் நாயகியாக கடந்த பல வருடங்களாக கோலிவுட் திரையுலகில் வலம் வந்த த்ரிஷா, அரண்மனை 2' படத்தை அடுத்து நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் மட்டும் தற்போது நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் முதன்முதலாக ஆக்சன் அவதாரம் எடுக்கும் படம் 'கர்ஜனை

இந்த படத்தின் இயக்குனர் சுந்தர்பாலு பேட்டி ஒன்றில் கூறுகையில், 'வெஸ்டர்ன் டான்ஸரான த்ரிஷா, நிகழ்ச்சி ஒன்றுக்கு கொடைக்கானல் செல்கிறார். அங்கு அவருக்கு ஏற்படும் பிரச்சனை என்ன? அந்த பிரச்சனையில் இருந்து அவர் எப்படி மீண்டும் வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை என்று இயக்குனர் கூறியுள்ளார்.

மேலும் கொடைக்கானல் கொண்டை வளைவில் தனியாக ஜீப் ஓட்டுவது, காரைக்குடி புழுதி மணலில் குதிரை சவாரி, ரோப் சண்டை காட்சி என இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளுக்காக டூப் இல்லாமல் ரிஸ்க்கான காட்சியில் த்ரிஷா தைரியமாக நடித்துள்ளதாகவும் தனது பேட்டியில் கூறியுள்ளார் சுந்தர் பாலு.

விளம்பப்படம் எடுப்பதில் அனுபவம் வாய்ந்த இயக்குனர் சுந்தர்பாலு, விளம்பர படம் போலவே இந்த திரைப்படத்தையும் குறிப்பிட்ட காலத்திற்குள் எடுத்து முடித்துள்ளார். மிக விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்கவுள்ளதாம் படக்குழு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.