close
Choose your channels

சென்னை மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாள் விடுமுறை. கலெக்டர் உத்தரவு

Wednesday, April 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. மேலும் 12ஆம் தேதி பதிவாகும் வாக்குகள் ஏப்ரல் 15ஆம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலையே முடிவுகள் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் ஆர்கே நகர் இடைத்தேர்தலையொட்டி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் உள்ளிட்ட மதுக் கடைகளுக்கு வரும் 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
அதேபோல், வாக்கு எண்ணிக்கை நாளான ஏப்ரல் 15-ம் தேதியும் மதுக்கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஏப்ரல் 10, 11, 12, மற்றும் 15 ஆகிய நான்கு நாட்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள எந்த டாஸ்மாக் கடைகளும் திறந்திருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.