close
Choose your channels

சசிகலா அணி மகளிரணியினரின் நிர்வாண மிரட்டல். அநாகரீக அரசியலின் உச்சக்கட்டம்

Saturday, April 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ராஜாஜி, காமராஜர், அண்ணா ஆகியோர்கள் நடத்திய நாகரீக அரசியல் இன்று அநாகரீகத்தின் உச்சக்கட்டத்தில் உள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மொத்தமாக பணம் பதுக்கி வைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்திற்கு சோதனை செய்ய சென்ற பறக்கும் படையினர் முன் சசிகலா அணி மகளிரணியினர் நிர்வாண மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுவரை நடந்த இடைத்தேர்தல்களிலேயே அதிகபட்ச முறைகேடு ஆர்.கே.நகர் தேர்தலில்தான் நடப்பதாக அரசியல் விமர்சகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆர்.கே.நகர் தண்டையார்பேட்டை சேனியம்மன் கோயில் தெருவில் உள்ள ஒருவீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக அதிகளவில் பணம் பதுக்கிவைத்திருப்பதாக பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த வீட்டில் சோதனை நடத்த, பறக்கும்படையினர் துப்பாக்கிய ஏந்திய போலீஸாருடன் சென்றபோது பறக்கும் படையினர்களை பணிசெய்ய விடாமல் சசிகலா அணி மகளிரணியினர் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வெளியேற்றினர்.
இதுகுறித்து பறக்கும்படையினர் கூறியபோது, "எங்களுக்குக் கிடைத்த தகவலின்பேரில் சோதனை நடத்தச் சென்றோம். அப்போது, அங்கு இருந்த பெண்கள், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக ஒர் அறைக்குள் செல்ல எங்களை அனுமதிக்கவில்லை. அதைமீறி உள்ளே செல்ல நாங்கள் முயன்றபோது, வாசலை வழிமறித்த பெண்கள், ஆவேசமாக, சோதனைதானே நடத்தவேண்டும் என்று கூறியபடி சேலையை கழற்றி எறிந்தார். இதை எதிர்பார்க்காத நாங்கள், உடனடியாக என்ன செய்வதென்று தெரியாமல் அங்கிருந்து வெளியேறத் தொடங்கினோம். அதற்குள் ஒரு நடுத்தர வயது பெண், தன்னை முழு நிர்வாணமாக்கிக்கொண்டார். திக்குமுக்காடிப்போன நாங்கள், அந்த இடத்தைக் காலி செய்துவிட்டோம். சோதனை நடத்தச் சென்ற இடத்தில் பெண்கள் இப்படி செய்தால், எப்படி எங்களால் கடமையைச் செய்ய முடியும். அதிகார வர்க்கக் குறுக்கீடு, தொண்டர்களின் இப்படியான அடாவடி... இதையெல்லாம் தாண்டித்தான் எங்கள் கடமையைச் செய்ய வேண்டியிருக்கிறது!" என்று வருத்ததுடன் கூறினர்
ஒரு திரைப்படத்தில் வடிவேலு ஒரு பெண்ணை கைது செய்ய போகும்போது உடைகளை கழற்றி எறிந்துவிட்டு 'நீ சரியான ஆம்பளையா இருந்தா உள்ளே வந்து அரெஸ்ட் பண்ணு' என்று கூறும் காமெடி காட்சிதான் இந்த சம்பவம் ஞாபகப்படுத்துவதாக சமூக வலைத்தளங்களில் கூறப்பட்டு வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.