close
Choose your channels

சென்னை அண்ணா சாலையில் சற்றுமுன் மீண்டும் விரிசல். போக்குவரத்து பாதிப்பு

Tuesday, April 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை அண்ணா சாலையில் கடந்த ஞாயிறு அன்று திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் மற்றும் பேருந்து சிக்கி, அந்த பகுதி முழுவதும் போக்குவரத்து ஸ்தபித்திருந்த நிலையில் சில நிமிடங்களுக்கு மீண்டும் கிட்டத்தட்ட அதே பகுதியில் சாலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதே பகுதியில் அடிக்கடி பள்ளம் மற்றும் விரிசல் ஏற்பட்டு வருவது வாகன ஓட்டிகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. கடந்த ஞாயிறு அன்று ஏற்பட்ட பள்ளம் நேற்று சரிசெய்யப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இன்று ஏற்பட்ட விரிசலின் வழியாக வாகன ஓட்டிகள் செல்ல வேண்டாம் என்று போக்குவரத்து போலீசார் வலியுறுத்தியுள்ளனர். இந்த விரிசலை சரிசெய்யும் பணியை இன்னும் சற்று நேரத்தில் மாகராட்சி மற்றும் மெட்ரோ ஊழியர்கள் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன் கூறியபோது, ' ஒரு மணி நேரத்தில் விரிசல் சரி செய்யப்படும். விரிசல் ஏற்பட்ட இடத்திற்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.