close
Choose your channels

ரம்யாகிருஷ்ணனிடம் ராஜமெளலி மன்னிப்பு கேட்டது ஏன்?

Tuesday, April 11, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'பாகுபலி' என்ற ஒரே படத்தின் மூலம் உலகப்புகழ் பெற்றுவிட்ட பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய திரைப்படமான 'பாகுபலி 2' படத்தை உலகமே எதிர்பார்த்து காத்திருக்கின்றது. ஏப்ரல் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ள இந்த படத்தில் சிவகாமி என்ற கேரக்டரில் மிக அற்புதமாக நடித்த ரம்யா கிருஷ்ணனிடம் இயக்குனர் ராஜமெளலி பகிரங்கமாக பொது மேடையில் மன்னிப்பு கேட்டார்.

சமீபத்தில் சென்னையில் நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ராஜமெளலி, ''பாகுபலி' திரைப்படத்தில் மிக முக்கிய, அழுத்தமான கதாப்பாத்திரம் சிவகாமி. இந்த கதாப்பாத்திரத்திற்காக வேறு ஒரு நடிகையை முதலில் தான் அணுகியதை எண்ணி வெட்கப்படுவதாகவும், அதற்காக ரம்யா கிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் ராஜமெளலி கூறினார். ஏற்கனவே ஐதராபாத்தில் நடைபெற்ற இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு இசை வெளியீட்டு விழாவிலும் மன்னிப்பு கேட்ட ராஜமெளலி, சென்னையில் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக இதே கேரக்டரில் நடிக்க மோகன்பாபுவின் மகள் லட்சுமிமஞ்சுவை படக்குழுவினர் அணுகியதாகவும், ஆனால் பிரபாஸ், ராணாவுக்கு அம்மாவாக நடிக்க லட்சுமி மஞ்சு மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த கேரக்டருக்கு படக்குழுவினர் ஸ்ரீதேவியையும் அணுகியதாகவும், அவர் அதிக சம்பளம் கேட்டதால் பின்னர் ரம்யாகிருஷ்ணனனை ஒப்பந்தம் செய்ததாகவும் கூறப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.