close
Choose your channels

ரஜினியை வெடிக்காத பட்டாசு என கூறிய சீமானுக்கு எஸ்.வி.சேகர் பதிலடி

Tuesday, June 27, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக அரசியல் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியையே சுற்றியே வருகிறது. அவர் அரசியலுக்கு தனிக்கட்சி ஆரம்பித்து வந்தால் பல கூட்டணிகள் உடையவும், மாறவும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை அடிக்கடி விமர்சனம் செய்து வரும் நாம் தமிழர் கட்சியின் சீமான், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியபோது, 'ரஜினிக்கு அரசியல் தேவையில்லை என்று பலமுறை சொல்லிவிட்டோம். அதையும் மீறி அவர் அரசியலுக்கு வந்தால் மிகப்பெரிய பட்டாசாக இருந்தாலும் அது வெடிக்காமல் புஸ் என்று போகும் பட்டாசு நிலைதான் ரஜினிக்கு ஏற்பட்டும்' என்று கூறினார்.
சீமானின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய நகைச்சுவை நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது சமூக வலைத்தளத்தில், '“ரஜினிகாந்த் வெடிக்காத தீபாவளி பட்டாசு ஆகிவிடுவார்” : சீமான். நமுத்துப்போன ஊசி பட்டாசின் அழுகை' என்று பதிலடி கொடுத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.