close
Choose your channels

மக்கள் சூப்பர் ஸ்டாருக்காக மன்னிப்பு கேட்ட இயக்குனர்

Friday, March 10, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த 'மொட்ட சிவா கெட்ட சிவா' படம் பல தடைகளை தகர்த்து நேற்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. இந்த படத்திற்கு பாசிட்டிவ் ரிசல்ட் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்தாலும், இந்த படத்தின் டைட்டிலில் ராகாவா லாரன்ஸ் பெயருக்கு முன்னால் 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற டைட்டில் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டது. இதுகுறித்து உடனடியாக விளக்கம் அளித்த ராகவா லாரன்ஸ், இந்த பட்டம் தனக்கே தெரியாமல் இயக்குனர் போட்டுவிட்டதாகவும், உலகின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே என்றும் கூறியிருந்தார்

இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் சாய்ரமணி இதுகுறித்து விளக்கத்துடன் கூடிய மன்னிப்பு கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கடிதத்தில் இயக்குனர் சாய்ரமணி கூறியிருப்பதாவது:

என் படத்தின் கதாநாயகனான ராகவா லாரன்ஸ் அவர்களின் நற்செயலையும், மனித நேயத்தையும் கருத்தில் கொண்டு அவருக்கு 'மக்கள் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை இப்படத்தில் பயன்படுத்தி இருந்தேன். எங்கள் அன்பின் வெளிப்பாடாக அளித்த இந்த பட்டம் அவரை ஆச்சரியப்பட வைக்கவில்லை. என்னை உடனே கூப்பிட்டு கண்டித்தது மட்டுமில்லாமல் பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள அழைத்து உலக சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த் மட்டும் தான் என்றும், எனக்கு இந்த பட்டம் வேண்டாம் என்றும் கூறியுள்ளார். படத்தில் வரும் அந்த பட்ட பெயரை நீக்குவதற்கான கால அவகாசத்தை கருத்தில் கொண்டு மன்னித்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு இயக்குனர் சாய்ரமணி அந்த மன்னிப்பு கடிதத்தில் தெரிவித்துள்ளார். ராகவா லாரன்ஸ் விளக்கம், மற்றும் இயக்குனரின் மன்னிப்பு கடிதத்தை அடுத்து சமூக வலைத்தளங்களில் இந்த பிரச்சனை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.