close
Choose your channels

'தெறி' நாயகியின் புதிய அவதாரம்

Tuesday, April 5, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட், டோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் நடிகை சமந்தா, இளையதளபதி விஜய்யுடன் நடித்த 'தெறி', சூர்யாவுடன் நடித்த '24', மகேஷ்பாபுவுடன் நடித்த 'பிரம்மோத்சவம்' ஆகிய படங்கள் ரிலீஸ் ஆன பின்னர் அவருடைய மார்க்கெட் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிலையில் இதுவரை நடிகையாக இருந்த சமந்தா தற்போது தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கன்னடத்தில் சூப்பர் ஹிட் படமான 'லூசியா' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் பவண்குமாரின் அடுத்த படமான 'யூ டர்ன்' என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகை சமந்தா பெற்றுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த படத்தை சமந்தா தமிழில் ரீமேக் செய்யவுள்ளதாகவும், அதில் முக்கிய கேரக்டரில் அவரே நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் இயக்குனர், ஹீரோ மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளிவரும் என தெரிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.