close
Choose your channels

'வேலையில்லா பட்டதாரி'களுக்கு சமந்தா கொடுத்த ரூ.5000/-

Wednesday, July 1, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒரு படம் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி முடித்த பின்னர் கடைசி நாள் படப்பிடிப்பில் ஒவ்வொரு ஹீரோவும் ஒவ்வொரு விதத்தில் அந்த படத்தில் பணிபுரிந்த டெக்னீஷியன்கள் உள்பட அனைவருக்கும் ஏதாவது பரிசுப்பொருட்களை கொடுப்பது வழக்கம். 'தல அஜீத் பிரியாணி, இளையதளபதி விஜய் தங்கத்தில் பரிசுபொருட்கள் என கொடுத்து வரும் நிலையில் சமந்தாவும் சமீபத்தில் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் கடைசி நாள் படபிடிப்பு தினத்தில் படக்குழுவினர்களுக்கு சிறப்பு பரிசு ஒன்றை அளித்துள்ளார்.

தனுஷுக்கு ஜோடியாக 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ள சமந்தா படபிடிப்பின் கடைசி தினத்தில், படத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் தலா ரூ.5000/- கொடுத்துள்ளார். உதவி இயக்குனர்கள், லைட்மேன்கள், டிராலி தள்ளுபவர்கள், கிளாப் அடிப்பவர்கள் முதல் சுமார் 120 தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சமந்தா ரூ.5000/- கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த படம் குறித்து சமந்தா சமீபத்தில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியபோது, 'இதுவரை நான் நடித்த கேரக்டர்களிலேயே இந்த படத்தின் கேரக்டர்தான் எனக்கு வித்தியாசமாகவும், சவாலாகவும் இருந்தது' என்று கூறியுள்ளார். தற்போது சமந்தா 'விஜய் 59' படத்தின் படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.