close
Choose your channels

அட்ரஸ் தேடி போய் அடிப்பேன். சமுத்திரக்கனியின் ஆவேசம் ஏன்?

Saturday, April 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர், நடிகர், சமுத்திரக்கனி சமூகநல அக்கறையுடன் படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர். அவரது 'அப்பா' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து வரும் மே 5ல் 'தொண்டன்' ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் நேற்று வெளியான 'பாகுபலி 2' படம் குறித்து தனது சமூக வலைத்தளத்தில் சமுத்திரக்கனி கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: 'இந்த படைப்பு விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது. எவனாவது அப்படி இப்படின்னு கருத்து சொன்னா, அட்ரஸ் தேடி வந்து அடிப்பேன். பாகுபலி உலக சினிமா' என்று கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தனது சமூக வலைத்தளத்தில், 'ராஜமெளலி, நீதானய்யா கலைஞன், இந்த படத்தை 100 முறை பார்க்கலாம், பார்க்கணும். உத்தமமான படைப்பு. 5 வருட தியானம். இந்த படத்துக்கு யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம். என் தமிழ் சொந்தங்களே, அனுபவிங்க... என்று கூறியுள்ளார்.

'பாகுபலி 2' திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி முழுதாக ஒருநாள் ஆகிவிட்ட நிலையில் இதுவரை எந்த ஊடகமும், சமூக வலைத்தள பயனாளிகளும், திரைப்பட விமர்சகர்களும் நெகட்டிவ் விமர்சனம் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இனிமேல் நெகட்டிவ் விமர்சனம் தர முயற்சிப்பவர்கள் சமுத்திரக்கனியின் அடியில் இருந்து தப்பிக்கவும் யோசித்து வைத்து கொள்ள வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.