close
Choose your channels

ஆர்மீனியா நாட்டிற்கு செல்லும் செல்வராகவன்-சந்தானம் கூட்டணி

Wednesday, May 24, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடித்த 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படம் வரும் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது என்று வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் செல்வராகவனின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

செல்வராகவன் இயக்கும் அடுத்த படம் சந்தானம் நடிக்கும் 'மன்னவன் வந்தானடி. செல்வராகவனின் 'யாரடி நீ மோகினி' படம் போலவே இந்த படமும் ஐடி ஊழியர்கள் குறித்த கதை என்றும், அதே நேரத்தில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் எமோஷனலாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஆர்மீனியா நாட்டில் 20 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும், இதற்காக செல்வராகவன், சந்தானம், நாயகி ஆதித்தி போஹன்கர் உள்பட படக்குழுவினர் அனைவரும் விரைவில் ஆர்மீனியா செல்லவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

யுவன்ஷங்கர் ராஜா இசையில், லோகநாதன் ஸ்ரீனிவாசன் ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகவிருக்கும் இந்த படம் இவ்வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தை அடுத்து செல்வராகவன், சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.