close
Choose your channels

குண்டான உடலை கேலி செய்த ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்த சரண்யா மோகன்

Thursday, June 8, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வேலாயுதம், யாரடி நீ மோகினி, அப்புக்குட்டி, வெண்ணிலா கபடிக்குழு உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகை சரண்யா மோகன். இவர் தனது நீண்ட நாள் நண்பர் அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை சமீபத்தில் பிறந்தது.

இந்த நிலையில் திரைப்படங்களில் நடிக்கும்போது ஸ்லிம் ஆக இருந்த சரண்யாமோகன், குழந்தை பெற்றவுடன் உடல் எடை அதிகரித்து குண்டாக மாறினார். இவருடைய சமீபத்திய தோற்றத்தை சமூக வலைத்தளங்களில் பலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஒருசில இணையதளங்கள் அவருடைய குண்டு உடலை கேலி செய்து செய்தியும் வெளியிட்டன.

இந்நிலையில் தனது குண்டு உடல் மீதான விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தக்க பதிலடி ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியதாவது: 'நான் ஒரு பெண், ஒரு தாயாக இருப்பதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன். தாய்மைக்கு பின் ஒரு பெண்ணின் தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும். நான் எப்படி இருக்கிறோனோ அதனை ஏற்றுக்கொள்ளும் உண்மையான மனிதர் எனக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது` என பதிவு செய்துள்ளார். மேலும் அவர் தன் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் அதில் பதிவேற்றி உள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.