close
Choose your channels

15 வருடத்திற்கு பின் மீண்டும் இணையும் பிரபல ஹீரோக்கள்

Thursday, June 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர்கள் சரத்குமார் மற்றும் நெப்போலியன் இணைந்து நடித்த 'தென்காசிபட்டணம்' திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இருவரும் மீண்டும் 15 வருடங்களுக்கு பின்னர் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.
சரத்குமார், ராதிகா நடிப்பில் கடந்த 2013ஆம் ஆண்டு வெளிவந்த 'சென்னையில் ஓர் நாள்' வெற்றியை அடுத்து தற்போது 'சென்னையில் ஓர் நாள் 2' படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சரத்குமார் உளவுத்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.
பிரபல க்ரைம் கதை எழுத்தாளர் ராஜேஷ்குமார் கதைக்கு அறிமுக இயக்குனர் ஜெபிஆர் திரைக்கதை எழுதி இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஒரு முக்கிய வேடத்தில் நெப்போலியன் நடித்துள்ளார். சரத்குமார், நெப்போலியன் ஆகியோர் நீண்ட இடைவெளிக்கு பின் இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முனிஷ்காந்த், அஞ்சனா ப்ரேம், ராஜசிம்ஹன் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் சுஹாசினியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சரத்குமார் படத்தில் சுஹாசினி நடிப்பது இதுவே முதல்முறை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.