close
Choose your channels

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல். ஓபிஎஸ்-சசிகலா அணியின் சின்னங்கள்

Thursday, March 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக உடைந்த நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளுக்கும் ஒன்றுபட்ட அதிமுகவின் சின்னமான இரட்டை இலை கிடையாது என்றும் அந்த சின்னம் முடக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த நிலையில் இன்று காலை பத்து மணிக்கு இரு அணியினர்களும் தலா மூன்று சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இதன்படி சசிகலா அணியினர்களும், ஓபிஎஸ் அணியினர்களும் தேர்தல் சின்னங்களை சமர்ப்பித்தனர். அதிலிருந்து சசிகலா அணிக்கு தொப்பி சின்னமும், ஓபிஎஸ் அணிக்கு இரட்டை மின்கம்பம் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
மேலும் இரு அணிகளும் அதிமுக கட்சி பெயரை பயன்படுத்த கூடாது என்று கூறிவிட்ட நிலையில் சசிகலா தரப்பு கட்சியின் பெயர் அதிமுக அம்மா என்றும், ஓ.பி.எஸ் தரப்பு கட்சியின் பெயர் 'அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி' என்றும் அழைக்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.