close
Choose your channels

ஜெ. நினைவிடத்தில் சசிகலா சபதம். பெரும் பரபரப்பு

Wednesday, February 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, பெங்களூரில் சரண் அடைய கேட்டிருந்த அவகாசம் நிராகரிக்கப்பட்டதால் சற்று முன் பெங்களூருக்கு கிளம்பினார். செல்லும் வழியில் அவர் சென்னை மெரீனாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்றார்.

ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய சசிகலா அவரது சமாதியின் மேல் கையால் அடித்து சபதம் எடுத்தார். சசிகலா சபதம் எடுத்ததும் சுற்றி இருந்த அவரது ஆதரவாளர்கள் கரகோஷம் எழுப்பினர்.

சசிகலாவின் சபதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் என்ன மனதில் நினைத்து சபதம் எடுத்தார் என்று தெரியவில்லை என்றாலும் ஓபிஎஸ் மற்றும் அவருக்கு பின்னணியில் உள்ள கட்சிகளை அழிப்பேன் என்று சசிகலா சபதம் செய்ததாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.