close
Choose your channels

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதி?

Monday, February 13, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பத்திற்கு தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவ் எப்போது தீர்வு சொல்வார் என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் இந்த குழப்பத்திற்கு விடை நாளை சுப்ரீம் கோர்ட் மூலம் கிடைத்துவிடும் என தெரிகிறது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசன், சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் சசிகலா, இளவரசன், சுதாகரன் ஆகியோர்களின் தலைவிதி நாளை நிர்ணயிக்கப்படலாம். குறிப்பாக சசிகலாவுக்கு முதல்வர் வாய்ப்பு கிட்டுமா? கிட்டாதா? என்பது நாளை தெரிந்துவிடும்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ் மற்றும் அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை வழங்க உள்ள நிலையில் இந்த தீர்ப்பால் எந்தவித அசம்பாவிதமும் நடந்துவிட கூடாது என்பதற்காக தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.