close
Choose your channels

பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு வழங்கப்பட்ட 10,711.

Wednesday, February 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்ற சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் சற்று முன் பெங்களூர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் சரண் அடைந்தனர். நீதிமன்ற நடைமுறைகள் முடிந்து சசிகலா, இளவரசி ஆகிய இருவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

பெங்களூரு சிறையில் சசிகலாவுக்கு கைதி எண் 10,711 ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதேபோல் இளவரசிக்கு கைதி எண் 10,712 மற்றும் சுதாகரனுக்கு கைதி எண் 10,713 ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் சிறை வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்நிலையில் நாளை சரண் அடைவதாக அனுமதி கோரியிருந்த சுதாகரனின் மனு நிராகரிக்கப்பட்டதால் அவரும் நீதிபதி முன் சரண் அடைந்தார். இன்னும் சில நிமிடங்களில் நீதிமன்ற நடைமுறைகளுக்கு பின்னர் அவரும் சிறையில் அடைக்கப்படவுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.