close
Choose your channels

சசிகலா சீராய்வு மனு: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு

Wednesday, August 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா, இந்த வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது சசிகலா தரப்பின் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் சற்றுமுன் இந்த மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியது. இதனால் சசிகலா விடுதலை ஆகக்கூடிய கடைசி வாய்ப்பும் பறிபோய்விட்டதால் அவர் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தே ஆகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில், சுப்ரீம் கோர்ட்டின் இறுதித் தீர்ப்பில் தாங்கள் எந்தக் குறையும் காணவில்லை என்று கூறி, மனுவை நீதிபதிகள் அமித்வராய், சரத் பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.