close
Choose your channels

சசிகலாவின் சபதம் பாஞ்சாலி சபத்திற்கு இணையானது. ஓ.எஸ்.மணியன்

Thursday, February 16, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com


கடந்த சில நாட்களாக அதிமுக இரண்டாக பிளவுபட்டு சசிகலா தலைமையில் ஒரு அணியும், ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணியும் பிரிந்தது. சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் சிறை செல்ல நேரிட்டது. இந்நிலையில் தற்போது அவரது ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பொறுப்பேற்கவுள்ளார். இதனால் கடந்த சில நாட்களாக நிலவி வந்த தமிழக அரசியல் குழப்பத்திற்கு தீர்வு கிடைத்துள்ளது.
இந்நிலையில் சசிகலா அணியின் முக்கிய தலைவரான ஓ.எஸ்,மணியன், இதுகுறித்து கூறியபோது, 'சசிகலா சிறைக்கு செல்லும் முன்னர் ஜெயலலிதாவின் சமாதியில் செய்த சபதம் நிறைவேறியுள்ளதாகவும், சசிகலாவின் சபதம், பாஞ்சாலியின் சபதத்திற்கு இணையானது என்றும் தெரிவித்துள்ளார். நவீன திரெளபதியான சசிகலா, சபதத்தில் ஜெயித்துள்ளதால் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்தில் இருப்பதாக அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
முன்னதாக சசிகலா நேற்று பெங்களூர் சிறையில் சரண் அடையும் முன், ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று மூன்று சபதங்கள் செய்தார். அதில் ஒரு சபதம் நிறைவேறிவிட்டதாக கூறப்படும் நிலையில் இன்னும் இரண்டு சபதங்கள் என்னென்ன என்பதை பொறுத்திருந்து பார்ப்போ

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.