close
Choose your channels

ஜெ. நீக்கிய இருவர் மீண்டும் அதிமுகவில். சிறைக்கு செல்லும் முன் சசிகலா அதிரடி

Wednesday, February 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் நேற்று தண்டனையை உறுதி செய்த நிலையில் இன்று அவர் பெங்களூரில் சரண் அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிறைக்கு செல்லும் முன் அதிரடி நடவடிக்கையாக சசிகலாவின் சகோதரி மகன் டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவின் உறவினர் வெங்கடேஷ் ஆகியோர் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த 2011-ஆம் ஆண்டு சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கிய அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவருடன் அவருடைய அவரது குடும்பத்தைச் சேர்ந்த 12 பேரையும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கினார்.
பின்னர் ஒருசில நாட்களில் சசிகலாவை மட்டும் மீண்டும் சேர்த்துக் கொண்ட ஜெயலலிதா சாகும் வரை சசிகலா குடும்பத்தினர்களை அதிமுகவில் சேர்க்கவில்லை.
இந்நிலையில் தான் சிறைக்கு சென்ற பின்னர் கட்சி தனது குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து சென்றுவிடக்கூடாது என்பதற்காக ஜெயலலிதாவே நீக்கிய டிடிவி தினகரன் மற்றும் டாக்டர் வெங்கடேஷை கட்சியில் மீண்டும் இணைத்துள்ளார் சசிகலா. இது அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்து நேரிலும் மன்னிப்பு கடிதம் மூலமும் விளக்கம் அளித்ததால், வெங்கடேஷ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்பட்டுள்ளதாக சசிகலா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.