close
Choose your channels

மேல்முறையீடு செய்வோம். தம்பித்துரை

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகலா உள்பட மூவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் தங்கள் கட்சியினர் புதிய சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழநிச்சாமியை தேர்வு செய்துள்ளதாகவும், அவரை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பார் என்று நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேல்முறையீடு செய்ய வாய்ப்பு உள்ளதா? என சட்ட நிபுணர்கள் கருத்து கூறியபோது, ' இந்த தீர்ப்பை மறுபரீசிலனை செய்யுங்கள் என புதிய ஆதாரங்கள் மூலம் கேட்டுக்கொள்ள ஒரு வாய்ப்பு இருப்பதாகவும், ஆனால் அந்த மனு தற்போது தீர்ப்பு அளித்துள்ள இரு நீதிபதிகளிடம்தான் செல்லும் என்றும், சுமார் எட்டு மாத காலம் ஆராய்ந்து கொடுத்த தீர்ப்பை இரு நீதிபதிகளும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றால் சசிகலா தரப்பில் இருந்து இதுவரை தாகல் செய்யப்படாத வலுவான ஆதாரங்கள் தாக்கல் செய்தால் மட்டுமே பரிசீலனை ஏற்றுக்கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.