close
Choose your channels

சரண் அடைந்தார் சசிகலா. இன்று முதல் 4 வருடங்களுக்கு ஜெயில் வாழ்க்கை

Wednesday, February 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, உச்சநீதிமன்ற உத்தரவின்படி சற்று முன்னர் பெங்களூர் பரப்பன அக்ராஹர நீதிமன்றத்தில் நீதிபதி முன்னர் சரண் அடைந்தார். அவருடன் இளவரசி சரண் அடைந்தார். சுதாகரன் இன்னும் நீதிமன்றத்தில் சரண் அடையவில்லை என்றும், உடல்நிலை சரியில்லை எனக்கூறி பெங்களூரு கூடுதல் உரிமையியல் நீதிமன்றத்தில் சுதாகரன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இன்று முதல் 4 வருடங்களுக்கு சரண் அடைந்தவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும்.

முன்னதாக சசிகலா பெங்களூரை சென்றடையும் முன்னர் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் சசிகலாவின் கணவர் நடராஜன் ஆகியோர் பெங்களூர் வந்தடைந்தனர்.

சசிகலா மற்றும் மூவர் இன்று சரண் அடைவதை அடுத்து பெங்களூர் பார்ப்பன அக்ராஹர பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்பட்டிருந்தது. அங்கு அதிமுக தொண்டர்கள் உள்பட பொதுமக்கள் பலர் குவிந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.