close
Choose your channels

சசிகலா ஆஜராக வேண்டிய நீதிபதி பெயர் அறிவிப்பு

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிநீதிமன்ற நீதிபதி குன்ஹா அவர்களின் தீர்ப்பை இன்று காலை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் உடனே ஆஜராக வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் சசிகலா ஆஜராகவேண்டிய இடம், மற்றும் யார் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என்ற விபரம் தற்போது வெளிவந்துள்ளது.
பெங்களூரு நீதிமன்றத்தில் அறைஎண் 48 இல் சசிகலா உட்பட 3 பேரும் நீதிபதி அசோக் நாராயணன் முன்பாக ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் நகர சிவில் நீதிமன்ற பதிவாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்துள்ளார். இன்று மாலைக்குள் மூவரும் நீதிபதி அசோக் நாராயணன் முன் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.