close
Choose your channels

சசிகலா: ஜெ. நினைவிடத்தில் சபதம். எம்.ஜி.ஆர் இல்லத்தில் தியானம்.

Wednesday, February 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுப்ரீம் கோர்ட் உத்தரவை அடுத்து பெங்களூர் கிளம்பிவிட்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, அதற்கு முன்னதாக முன்னாள் முதல்வரும் தனது தோழியுமான ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு பின்னர் சபதம் ஏற்றார்.
பின்னர் அங்கிருந்து நேராக பெங்களூர் செல்லும் வழியில் ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் வீட்டுக்கு சென்றார். எம்.ஜி.ஆர் வீட்டின் முன் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த சசிகலா, வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர் படம் அருகில் அமர்ந்து தியானம் செய்தார்.
பின்னர் அவரது கார் பெங்களூரை நோக்கி செல்ல ஆரம்பித்துள்ளது. இன்னும் மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் அவர் பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.