close
Choose your channels

புதிய தமிழக அரசுக்கு சத்யராஜ் வைத்த முக்கிய கோரிக்கை

Wednesday, February 22, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்று தற்போது ஆட்சி செய்து வருகிறது. முதல்வரும் 500 மதுக்கடைகள் மூடுவது உள்பட மக்களை கவரும் வகையில் புதுப்புது அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழக அரசுக்கு பிரபல நடிகர் சத்யராஜ் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார். வரும் 24ஆம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் வருவதையொட்டி கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் முருகன், நளினி, பேரறிவாளன் உள்பட 7 பேர்கள் தண்டனை அனுபவித்து வரும் நிலையில் அவர்களை விடுவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கோலிவுட்டின் பிரபல நடிகர்கள் கடந்த சில மாதங்களாக ஜல்லிக்கட்டு மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்காக குரல் கொடுத்து கொண்டிருந்த நிலையில் சத்யராஜின் இந்த கோரிக்கை வித்தியாசமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.