close
Choose your channels

விஜய்-அட்லி படத்தில் சத்யராஜ் வில்லன்?

Saturday, July 4, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஆரம்ப காலகட்டத்தில் வில்லனாக தனது திரையுலக வாழ்க்கையை தொடக்கிய சத்யராஜ், அதன்பின்னர் ஹீரோவாக புரமோஷன் ஆனார். அவர் ஹீரோவாக நடித்த கடலோர கவிதைகள், ஏர்போர்ட், ஜீவா, மக்கள் என் பக்கம் உள்பட பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனதால், அதன்பின்னர் வில்லன் வேடத்தையே மறந்துவிட்டார். ரஜினி நடித்த சிவாஜி' படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க ஷங்கரிடம் இருந்து வாய்ப்பு வந்தபோது அதை மறுத்தவர் சத்யராஜ் என்பது தெரிந்ததே.

இந்நிலையில் தற்போது உருவாகி வரும் விஜய்-அட்லி படத்தில் சத்யராஜுக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. போலீஸ் வேடத்தில் விஜய் இந்த படத்தில் நடிக்கவிருப்பதாகவும், இந்த படத்தில் வரும் ஒரு ப்ளாஷ்பேக் காட்சிக்காக ஒரு பவர்புல் வில்லன் தேவைப்படுகிறது என்றும், அதற்காக அட்லி, சத்யராஜை அணுகியதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அட்லியின் 'ராஜா ராணி' படத்தில் சத்யராஜ், நயன்தாரா தந்தையாக நடித்திருந்ததார் என்பது குறிப்பிடத்தக்கது.

'நண்பன்' படத்தில் விஜய்க்கு பேராசிரியராகவும், 'தலைவா' படத்தில் விஜய்க்கு தந்தையாக நடித்திருந்த சத்யராஜ், இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க சம்மதிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த படத்தில் மெயின் வில்லனாக மகேந்திரன் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடதக்கது.

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், மகேந்திரன் மற்றும் பலர் நடிக்கவிருக்கும் இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.