close
Choose your channels

திரையுலகிற்கு சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேட்டுள்ள 5 கேள்விகள்

Friday, July 7, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி ஆகியவற்றை எதிர்த்து உண்மையில் மக்கள் தான் போராட வேண்டும். எந்த வரி போட்டாலும் அதை கட்டபோவது மக்கள் தான். ஆனால் மேற்கண்ட வரிகளால் எந்தவித பாதிப்பும் இல்லாத திரைத்துறையினர்களும், திரையரங்க உரிமையாளர்களும் போராட்டம் நடத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் திரைத்துறையினர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் இந்த இயக்கம் 5 கேள்விகளை கேட்டுள்ளது. அந்த ஐந்து கேள்விகள் பின்வருமாறு:
1. வாகன பார்க்கிங்கிற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் வசூலிக்க மாட்டோம் என்று அறிவிக்க தயாரா?
2. தியேட்டருக்குள் விற்கப்படும் உணவுப்பொருட்களை எம்.ஆர்.பி விலையில் விற்க தயாரா?
3. வெளியில் இருந்து கொண்டு வரும் உணவுப்பொருட்களை தியேட்டருக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை என்ற சட்டத்திற்கு புறம்பான போக்கை மாற்ற தயாரா?
4. தியேட்டர் கவுண்டரில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டும் வசூலிப்போம் என்று அறிவிக்க தயாரா?
5. சம்பாதிக்கும் கோடிக்கணக்கான பணத்திற்கு சட்டப்படி நாங்கள் வரி கட்டுவோம், கருப்பு பண பரிமாற்றம் செய்ய மாட்டோம் என்று திரை நட்சத்திரங்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகிஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அறிவிக்க தயாரா?
என்று சட்டப்பஞ்சாயத்து இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த கேள்விகளுக்கு திரையுலகினர் பதில் அளிப்பார்களா? என்று பொறுத்திருத்து பார்ப்போம்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.