close
Choose your channels

கூவத்தூரில் 144 தடை உத்தரவு. போலீசார் அதிரடி

Tuesday, February 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கூவத்தூரில் சசிகலா ஆதரவாளர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதும், அவர்களுடன் சசிகலா ஆலோசனை செய்து கொண்டிருப்பதும் தெரிந்ததே.
இந்நிலையில் கூவத்தூரில் இருக்கும் எம்.எல்.ஏக்களை சந்திக்க முதல்வர் ஓபிஎஸ் அங்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அதே நேரத்தில் கூவத்தூர் நோக்கி சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோவளம் அருகே தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் கூவத்தூரில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதால் அங்கு 144 தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது. கல்பாக்கம் முதல் கூவத்தூர் வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், கூவத்தூர் வழியாக செல்லும் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
கூவத்தூரில் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை இந்த 144 தடை உத்தரவு என காவல்துறை தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.