close
Choose your channels

சென்னை மெரீனா தடை உத்தரவு வாபஸ். காவல்துறை அறிவிப்பு

Sunday, February 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை மெரீனாவில் சமீபத்தில் நடைபெற்ற மாணவர்களின் எழுச்சிப்போராட்டத்தின் கடைசி தினத்தன்று ஒருசில சமூக விரோதிகளால் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையால் மெரீனாவை சுற்றியுள்ள பகுதிகள் பெருமளவு பாதிக்கப்பட்டது. காவல்நிலையம் உள்பட பல இடங்களில் சமூக விரோதிகளால் தீ வைக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் இந்த பகுதியில் வன்முறை நிகழாமல் தடுக்கும் பொருட்டு கடந்த மாதம் 29ஆம் தேதி காவல்துறை 144 தடை உத்தரவை பிறப்பித்தது. இந்த தடை உத்தரவு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வரை இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது மெரீனா உள்பட அனைத்து பகுதிகளிலும் அமைதி திரும்பியுள்ளதால் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டதாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். இதனால் கடந்த சில நாட்களாக மெரீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்ய தயங்கியவர்கள் இனி தைரியமாக செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.