close
Choose your channels

காமெடி நடிகர் செந்தில் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்

Monday, August 21, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகில் சுமார் 40 ஆண்டுகாலமாக நகைச்சுவை வேடங்களில் நடித்து வரும் செந்தில் ஒருசில ஆண்டுகள் இடைவெளிக்கு பின்னர் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் செந்தில் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.
மெட்ரோ' பட நாயகன் சிரிஷ் நடிக்கும் அடுத்த படமான 'பிஸ்தா' படத்தில் செந்தில் நடிக்கவுள்ளார். இந்த தகவலை சிரிஷ் தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். மேலும் செந்தில் மட்டுமின்றி காமெடி நடிகர் சதீஷும் இந்த படத்தில் இணணந்திருப்பதாக சிரிஷ் தெரிவித்துள்ளார்.
'மெட்ரோ' படத்தின் எடிட்டர் ரமேஷ் பாரதி இயக்கும் இந்த படத்தில் மிருதுளா முரளி மற்றும் அருந்ததி நாயர் ஆகிய இரண்டு நாயகிகளும், நமோ நாராயணன், சுவாமி நாதன், யோகிபாபு, செண்ட்ராயன் உள்பட பலரும் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர். இந்த படத்திற்கு இசையமைக்கும் தரண் அவர்களுக்கு இது 25வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.