close
Choose your channels

ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகளை தத்தெடுத்தார் ராகவா லாரன்ஸ்

Tuesday, April 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தற்போதைய பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள் ஒரு குழந்தையை வளர்க்கவே சிரம்ப்பட்டு வருகின்றனர். ஒரு குழந்தைக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு, திருமணம் ஆகிய செலவுகளுக்கே பெற்றோர்களின் உழைப்பு கரைந்து போகின்றது. இந்த நிலையில் ஒரு நடுத்தர குடும்பத்தில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பிறந்தால் அந்த குழந்தைகளை வளர்க்க அந்த பெற்றோர்கள் எந்த அளவுக்கு கஷ்டப்படுவார்கள் என்பதை சொல்லவே தேவையில்லை
ஆம், ஸ்ரீனிவாசன், யத்ரி என்ற தம்பதிக்கு கடந்த மூன்று வருடங்களுக்கு முன் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்தன. லக்‌ஷன், லக்‌ஷயா, லக்‌ஷிகா, லக்‌ஷா என்ற பெயருள்ள இந்த குழந்தைகளை வளர்க்க அவர்களது பெற்றோர்கள் கஷ்டப்பட்டு வருவதை ஒரு பத்திரிகையாளர் மூலம் கேள்விப்பட்ட நடிகர் ராகவா லாரன்ஸ், இந்த நான்கு குழந்தைகளையும் தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான படிப்பு, எதிர்கால தேவைகள் அனைத்துக்கும் தான் பொறுப்பேற்பதாக கூறியுள்ளார்.
லாரன்ஸ் அவர்களின் இந்த உதவிக்கு ஸ்ரீனிவாசன் - யத்ரி தம்பதிகள் ஆனந்தக்கண்ணீருடன் நன்றி தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.