close
Choose your channels

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் ரிலீஸ் செய்யும் அடுத்த பேய்ப்படம்

Tuesday, August 25, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நாய்கள் ஜாக்கிரதை' படத்தின் வெற்றியின் மூலம் மீண்டும் கோலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த நடிகர் சிபிராஜ், அதே வேகத்துடன் ஆரம்பித்த அடுத்த படம்தான் 'ஜாக்சன் துரை'. இந்த படத்தில் சிபிராஜுடன் சத்யாரஜ், மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் ஆகியோர்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக பிந்துமாதவி நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இதே நிறுவனம் இதற்கு முன்னாள் பல பேய்ப்படங்களை ரிலீஸ் செய்துள்ள நிலையில் 'ஜாக்சன் துரை' என்ற இந்த பேய்ப்படத்தையும் ரிலீஸ் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் மீண்டும் சிபிராஜ் போலீசாகவும், சத்யராஜ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகிய இருவரும் பேயாகவும் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் அமெரிக்க நடிகர் ஜாசாரி(Zachary ) என்பவரும் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். சித்தார்த் விபின் இசையமைக்கும் இந்த படத்தை தரணிதரண் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே 'பர்மா' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. யுவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தை விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்து வருகிறார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.