close
Choose your channels

இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும். நடிகர் சித்தார்த்

Saturday, February 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழக சட்டசபையில் ஏகப்பட்ட அமளிகளுக்கு பின்னர் ஒருவழியாக நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்துள்ளது. முதல்வர் பழனிச்சாமிக்கு ஆதரவாக 122 வாக்குகளும், எதிர்ப்பாக 11 வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் இந்த வாக்கெடுப்பு குறித்து நடிகர் சித்தார்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது: சிறையில் இருக்கும் சசிகலாவிடம் ஒரு லேப்டாப்பை கொடுத்துவிடுங்கள். இதனால் எடப்பாடி பழனிச்சாமியும் அவரது குழுவினர்களும் இனி நான்கு ஆண்டுகள் பெங்களுரூக்கு செல்லும் பயண செலவாவது மிச்சப்படும். நாம் இன்னும் கொஞ்சம் அதிகமாக உணவில் உப்பை சேர்த்து கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.
முன்னதாக அவர் மேலும் கூறியதாவது: இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாகப் போகட்டும். தமிழ்நாட்டுக்கு இனி நம்பிக்கை எதுவும் உள்ளதா? சட்டமன்றக் காட்சிகளை சிறுவர்களும் பார்க்கட்டும். இதிலிருந்து அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளட்டும். ஜனநாயகத்தின் மோசமான நாட்கள் இதுதான். மேலும் திமுக தனது எதிர்க்கட்சி பணியை சரியாக செய்துள்ளது' என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.