close
Choose your channels

பாடல் இல்லை, இடைவேளை இல்லை. சிம்புவின் அடுத்த படம் குறித்த தகவல்

Saturday, July 29, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிம்பு நடிப்பில் வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தை அடுத்து அவர் 'கெட்டவன்' மற்றும் 'பில்லா 3' படங்களில் நடிக்கவுள்ளதாக வதந்திகள் பரவியது. ஆனால் இந்த வதந்திக்கு சமீபத்தில் முற்றுப்புள்ளி வைத்த சிம்பு, அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை மிக விரைவில் வெளியிடுவேன்' என்று கூறினார்.
இந்த நிலையில் சற்று முன்னர் சிம்பு தனது சமூக வலைத்தளத்தில் தனது அடுத்த படம் குறித்து குறிப்பிடுகையில், 'கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம் என்று குறிப்பிட்டு அதன் பின்னர் ஏழு முறை வீழ்ந்து எட்டாவது முறை எழுந்திரு' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது புதிய படத்தின் டைட்டில் மற்றும் பிற விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பதிவு செய்துள்ள இன்னொரு டுவீட்டில், 'இந்த படத்தில் பாடல்களும் இல்லை, இடைவேளையும் இல்லை. எனவே பாப்கார்னை முதலிலேயே வாங்கி வைத்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். சிம்புவின் இயக்கத்தில், டி.ராஜேந்தர் தயாரிப்பில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகவுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் மாதத்திற்கு இன்னும் ஒரே மாதம் மட்டுமே இடையில் உள்ள நிலையில் அவ்வளவு விரைவில் ஒரு படத்தை சிம்பு எப்படி முடிப்பார்? என்பது அனைவருக்கும் த்ரில் கலந்த ஆச்சரியத்தை அளித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.