close
Choose your channels

தனுஷ்-சிம்புவை துருக்கியில் இணைத்து வைத்த கவுதம் மேனன்

Monday, April 4, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட் திரையுலகில் எதிரும் புதிருமாக இருக்கும் இரண்டு நடிகர்களை ஒரே நேரத்தில் ஒரு இயக்குனர் இயக்குவது என்பது அரிதினும் அரிதாக நடக்கும் நிகழ்வாக இருக்கும். அப்படி ஒரு வாய்ப்பு தற்போது கவுதம் மேனனுக்கு கிடைத்துள்ளது.


சிம்பு நடிக்கும் 'அச்சம் என்பது மடமையடா' படத்தையும், தனுஷ் நடிக்கும் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தையும் ஒரே நேரத்தில் கவுதம் மேனன் இயக்கி வருகிறார். இந்நிலையில் தனுஷ் மற்றும் சிம்பு ஆகிய இருவரையும் ஒரே நேரத்தில் துருக்கி நாட்டிற்கு அழைத்து சென்று தனித்தனியே படத்திற்கு ஒரு பாடலை இயக்கும் புதுமையையும் கவுதம் மேனன் செய்ய உள்ளாராம்

அச்சம் என்பது மடமையடா' படத்திற்காக ஒரு பாடலையும், 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்திற்காக ஒரு பாடலையும் படமாக்க சிம்பு மற்றும் தனுஷ் இருவரையும் துருக்கிக்கு அழைத்து செல்ல கவுதம்மேனன் திட்டமிட்டுள்ளாராம். சமீபகாலமாக இருவரும் நட்புடன் இருப்பதால் இது சாத்தியமாயிற்று என்று கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.