close
Choose your channels

நடிகை அனுஹாசன் படத்தில் சிம்பு

Tuesday, July 28, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இயக்குனர் மணிரத்னம் மனைவியும் பிரபல நடிகையுமான சுஹாசினி இயக்கிய 'இந்திரா' படத்தில் நடித்த அனுஹாசன் தற்போது 'வல்லதேசம்' என்ற படத்தில் நடித்து வருகிறார். முதன்முதலாக ஆக்சன் ஹீரோயினியாக நடிக்கும் அனுஹாசன், விஜயசாந்தி போல ரிஸ்க்கான சண்டைக்காட்சிகளில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

குடும்பத்துடன் லண்டன் செல்லும் அனுஹாசன், அங்கு தனது குழந்தையை தொலைத்து விடுகிறார். அந்த குழந்தையை எப்படி மீட்கிறார் என்பதுதான் கதை. இந்த படம் முழுக்க முழுக்க லண்டன் மற்றும் இங்கிலாந்து நாட்டின் பிற நகரங்களில் எடுக்கப்பட்டுள்ளது.


இந்த படம் 80%வரை முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்திற்காக சமீபத்தில் ஒரு பாடல் ஒலிப்பதிவு செய்ய்ப்பட்டது. பழம்பெரும் இசையமைப்பாளர் எல்.வைத்தியநாதன் அவர்களின் மகன் முத்துகுமாரசாமி இசையமைத்துள்ள அந்த பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளார். துன்பமும் தோல்வியும் வரும்போது துவண்டு விடக்கூடாது என்ற கான்செப்ட்டில் உருவாகியிருந்த அந்த பாடலை மிகச்சிறப்பாக சிம்பு பாடியுள்ளதாக முத்துக்குமாரசாமி தெரிவித்துள்ளார். இது சிம்பு பாடிய மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த படத்தை ஒளிப்பதிவு செய்து இயக்குபவர் என்.டி.நந்தா என்பவர். இவர் லண்டன்வாழ் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை இந்தியாவிலும், இங்கிலாந்திலும் ரிலீஸ் செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.இந்த படத்தில் நாசர் ராணுவ கேப்டன் என்ற முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.