close
Choose your channels

பாடகி சுசிலீக்ஸ் விவகாரம்: சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார்

Sunday, May 14, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த பிப்ரவரி மாதம் பிரபல பின்னணி பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு அதில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகர், நடிகைகளின் அந்தரங்க படங்கள், வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் குறித்து பல்வேறு முரண்பாடான தகவல்கள் சுசித்ராவிடம் இருந்தும் அவருடைய கணவர் கார்த்திக்கிடம் இருந்து வெளிவந்தன

இந்த நிலையில் பாடகி சுசித்ரா தற்போது சென்னை காவல் ஆணையத்தில் புகார் மனு ஓன்றை அளித்துள்ளார். இந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த பிப்ரவரி மாதம் என்னுடைய டுவிட்டர் கணக்கிலிருந்து சில புகைப்படங்கள், வீடியோகள் வெளியாகின. அதற்கு எனக்கும் சம்பந்தம் இல்லை. அப்போது நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். எனது அக்கவுண்டை ஹேக் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' இவ்வாறு பாடகி சுசித்ரா புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகார் மனு மீது சென்னை காவல்துறை எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.