close
Choose your channels

சென்னை மெட்ரோ ரயில் நிலையத்தில் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பு

Saturday, November 7, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்து முடித்த 'ரஜினிமுருகன்' ரிலீஸ் குறித்து எந்தவித அதிகாரபூர்வ தகவல்களும் வெளிவராத நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கிவிட்டது.

ஏற்கனவே இந்த படத்தின் ஒருசில காட்சிகள் சென்னை மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் படமாக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் நேற்று கோயம்பேடு ரயில் நிலையத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவினர் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர்.

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் மற்றும் படக்குழுவினர் நேற்று படப்பிடிப்பை நடத்தினர். சென்னை மெட்ரோ ரயிலில் படப்பிடிப்பு நடத்த நாள் ஒன்றுக்கு ரூ.4 லட்சம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளை தவிர வேறு யாரும் நுழைய முடியாது என்பதால் எந்தவித இடையூறுகளும் இன்றி படப்பிடிப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.