close
Choose your channels

எஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

Monday, November 23, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'இசை' படத்தின் மூலம் மீண்டும் நாயகனாக ரீஎண்ட்ரி ஆன எஸ்.ஜே.சூர்யா விரைவில் வெளிவரவிருக்கும் கார்த்திக் சுப்புராஜின் 'இறைவி' படத்தில் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு எஸ்.ஜே.சூர்யாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு இயக்குனர் பரதனுக்கு சென்றுவிட்டதால், மீண்டும் ஒரு படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா முடிவு செய்துள்ளார்.

அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கவுள்ள ஒரு புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா நாயகனாக நடிப்பதோடு இந்த படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். இந்த படத்திற்கு '174' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு மரணம் நிகழும்போது அந்த மரணத்தை போலீஸார் கொலை என்று சந்தேகித்தால் '174' சட்டத்தை பயன்படுத்தி எப்.ஐ.ஆர் பதிவு செய்து விசாரணை செய்வார்களாம். இந்த சட்டத்தை அடிப்படையாக கொண்டு நகைச்சுவை மற்றும் த்ரில் கலந்த ஒரு கதையை இயக்குநர் மணிகண்டன் அமைத்துள்ளார். இவர் இயக்குனர் செல்வராகவனிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.