close
Choose your channels

ஓவியாவின் நேர்மைக்கு மேலும் ஒரு சான்று

Tuesday, August 1, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பங்கேற்பாளர்களில் அனைவரையும் கவர்ந்த ஒருவர் என்றால் அது ஓவியா என்பது சந்தேகமற்ற ஒருகூற்று. இதற்கு முதல் முழு காரணம் ஓவியாவின் உண்மை. சின்ன விஷயமாக இருந்தாலும் சரி, பெரிய விஷயமாக இருந்தாலும் சரி ஓவியா உண்மையையே பேசி வருகிறார். அது மற்ற பங்கேற்பாளர்களுக்கு எரிச்சலூட்டினாலும் அதை பற்றி அவர் கண்டு கொள்வதே இல்லை.

இந்த நிலையில் ஓவியா குறித்து சினேகன், ஆரவ் மற்றும் வையாபுரி தனியாக பேசி கொண்டிருந்தவீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஆரவ் கூறியபோது, 'ஓவியாவுக்கு ஒரு பரந்த மனசு இருக்கின்றது. உண்மையிலேயே ரொம்ப உண்மையா பொண்ணு. அவகிட்ட என்னதான் பொய்யை சொல்ல சொன்னாலும் அவ சொல்லவே மாட்டா. ஒருநாள் கண்ணை கட்டி கேம் விளையாடும்போது எனக்கு கொஞ்சம் கண் நன்றாக தெரிந்தது. நான் ஓவியாவிடம் கண் நல்லா தெரியுது, அதை யூஸ் பண்ணிக்கோ என்று சொன்னபோது, 'அதெல்லாம் முடியாது நான் அப்படியெல்லாம் பண்ண மாட்டேன்ன்னு சொன்னா. உண்மையா இருப்பது தான் ஓவியாவின் குணம் என்று கூறினார்.

அதேபோல் சினேகன் கூறியபோது, 'அடிபட்டு அடிபட்டு ரொம்ப நொந்து போயிருக்கா, எப்படி வெடிப்பா? எப்ப மூட் அவுட் ஆவான்னு சொல்லவே முடியாது. ஆனால் ஒரு நல்ல பார்ட்னர் கிடைத்து கல்யாணம் ஆயிட்ட டோட்டலா சேஞ்ச் ஆயிருவா, அவளோட மொத்த அன்பையும் அவரிடம் கொட்டிவிடுவார்' என்று கூறினார்.

ஓவியாவின் உண்மை குறித்து இவ்வளவு பெருமையாக பேசும் ஆரவ், சினேகன் ஆகிய இரண்டு பேருமே ஓவியா வெளியேற வேண்டும் என்று நேற்று நாமினேட் செய்தவர்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.