close
Choose your channels

நான் ஏன் கெட்டவனாக மாறினேன்: ஜூலியிடம் சினேகன்

Tuesday, September 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி 71வது நாளை கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் நேற்று புதிய தலைவரும், எவிக்சன் நாமினேசனும் நடந்தது. புதிய தலைவராக வையாபுரி தேர்வு செய்யப்பட்டார். பிந்துமாதவி, கணேஷ், ஹரிஷ் மற்றும் சுஜா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இன்றைய புரமோவில் சினேகன், ஜூலியிடம் புலம்புவது போன்ற காட்சிகள் உள்ளன. ஓவியா பிரச்சனை தவிர வேறு எதிலும் நான் முரண்பட்டது இல்லை என்று சினேகன் கூற அதற்கு ஜூலி 'அப்படின்னு நீங்க நினைச்சிங்கன்னா அது தப்பு' என்று கூறுகிறார்.

மேலும் 'கூட இருந்தவங்க கூட என்னை புரிந்து கொள்ளவில்லை, அவர்கள் நூறு விஷயங்கள் கூறினால் அதில் இரண்டை ஷேர் செய்கிறோம், எல்லாவற்றையும் கூறினால் யாரும் யாருடனும் பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். நான் இந்த வீட்டில் கெட்டவனாக மாறியதற்கு ஒரே ஒரு காரணம் தான்' என்று சினேகன் கூறுகிறார். அவர் கெட்டவன் தான் என்று ஆரம்பத்தில் இருந்தே பார்வையாளர்கள் பலர் கூறி வரும் நிலையில், அந்த காரணம் என்னவென்று இன்றைய நிகழ்ச்சியில் சினேகன் கூறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.