close
Choose your channels

தெர்மோகோல் அமைச்சரை கலாய்த்த கமல். இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு

Tuesday, April 25, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தனது சமூக வலைத்தளத்தில் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை பரபரப்பாக பதிவு செய்து வருகிறார். இதனால் ஒருசில அரசியல்வாதிகள் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்தும், ஒருசிலர் வழக்கும் போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இயக்குனர் அட்லியின் தயாரிப்பில் உருவாகி வரும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் கலந்து கொண்டார். இந்த விழாவில் கமல் பேசியபோது, 'இந்த படத்தின் டிரைலரை பார்த்தேன். நன்றாக வந்துள்ளது. ஒரு சினிமா ரசிகனாக எல்லோருக்கும் முன் இந்த படத்தின் டிரைலரை நான் பார்த்துவிட்டேன் என்பதில் பெருமைபப்ட்டு கொள்கிறேன்

இந்த படத்தின் டிரைலரில் இருந்து இதுவொரு ஆவிக்கதை போல் தெரிகிறது. ஆனால் தெர்மோகோல் போட்டு மூட முடியாத ஆவிகதை' என்று கூறினார். கமல் இவ்வாறு கூறியதும் பலத்த கைதட்டல் எழுந்தது

சமீபத்தில் தமிழக அமைச்சர் ஒருவர் வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் போட்டு மூட முயற்சி செய்ததும் அந்த திட்டம் தோல்வி அடைந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.