close
Choose your channels

நடிகை ஸ்ரீதேவியின் 50 வருடங்களும், 300வது படமும்...

Tuesday, May 23, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது அழகாலும் வசீகரத்தாலும், திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி திரையுலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகள் பூர்த்தியாகவுள்ளது. கடந்த 1967ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் நாள் 'துணைவன்' என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதன்பின்னர் புரட்சித்தலைவர் எம்ஜிஆருடன் 'நம்நாடு', சிவாஜிகணேசனுடன் 'வசந்தமாளிகை' போன்ற பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்தார். அதன் பின்னர் 1976ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இணைந்து நடித்த 'மூன்று முடிச்சு' படத்தின் மூலம் நாயகியாக மாறினார். நாயகியான பின்னர் அவர் கொடுத்த வெற்றி படங்கள் கணக்கிலடங்காது. கமல், ரஜினி ஆகிய இருவருக்குமே ராசியான ஜோடியாக வலம் வந்தார்.
இந்நிலையில் ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவரவுள்ள 'மாம்' திரைப்படம் அவரது 300வது படம் ஆகும். இந்த படத்தை அவர் அறிமுகமான முதல் படம் வெளியான அதே ஜூலை 7ஆம் தேதி வெளியிட ஸ்ரீதேவியின் கணவரும் 'மாம்' படத்தின் தயாரிப்பாளருமான போனிகபூர் திட்டமிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தின் நான்கு மொழிகளுக்கும் அவரே டப்பிங் குரல் கொடுக்கவுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
ரவி உத்யவார் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துக்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.