close
Choose your channels

தொலைஞ்சு போங்கடா!! ஸ்ரீப்ரியா குறிப்பிட்டது யாரை?

Wednesday, March 15, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பழம்பெரும் நடிகை ஸ்ரீப்ரியா தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்து வருபவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த ஒரு டுவீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீப்ரியா தன்னுடைய டுவீட்டில், 'திறமைசாலிகள் மற்றும் அனுபவசாலிகள் கவுரவிக்கப்படுத்தப்படாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை? அதிகாரம் படைத்தவர்களுக்கு இது தெரியாதா? அல்லது அறிவுரையாளர்களுக்கு அவர்கள் செய்வது தெரியாதா? தொலஞ்சி போங்கடா என்று டுவீட் செய்துள்ளார்.
இந்த டுவீட் சமீபத்தில் ஐநாவில் பரதம் ஆடிய ஐஸ்வர்யா தனுஷை குறிப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகையில் ஸ்ரீப்ரியா இதற்கு விளக்கமும் அளித்துள்ளார். 'என்னுடைய டுவீட் திறமையானவர்கள் மற்றும் அனுபவமுள்ளவர்களான எம்.எஸ்.வி மற்றும் நாகேஷ் போன்றவர்களை குறிக்கின்றது. நான் வேறு யாருடைய பெயரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. எனவே ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டு பொய்யான தகவல்களுடன் கூடிய செய்தியை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.