close
Choose your channels

'பாகுபலி 2' ரிலீசுக்கு முன்னர் ராஜமெளலியின் புத்திசாலித்தனமான திட்டம்

Friday, March 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கியுள்ள 'பாகுபலி 2' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து ஒரே நாளில் 50 மில்லியன் பார்வையாளர்களை பெற்று மிகப்பெரிய சாதனை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி 'பாகுபலி 2' படத்தின் ரிலீசுக்கு ஒரு வாரம் முன்னர் அல்லது இரண்டு வாரத்திற்கு முன்னர் முதல் பாகமான 'பாகுபலி' படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார். மீண்டும் முதல் பாகத்தை பார்த்துவிட்டு அதன்பின்னர் ஒரு சிறிய இடைவெளியில் இரண்டாம் பாகத்தை பார்த்தால் ரசிகர்கள் முழு அளவில் படத்தை ஈடுபாட்டுடன் ரசிக்க முடியும் என்பது தான் அவரது புத்திசாலித்தனமான திட்டம். இந்த திட்டத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளது என்பது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யப்படும் கமெண்ட்டுக்களில் இருந்து தெரிய வருகிறது.

பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்.எம்.கீரவானி இசையமைத்துள்ளார். கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவில், வெங்கடேஸ்வரராவ் படத்தொகுப்பில் இந்த படம் சுமார் 200 கோடிக்கும் மேல் செலவு செய்து உருவாக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.