close
Choose your channels

'பாகுபலி 2' படத்தில் நான்கு கிளைமாக்ஸா? ராஜமெளலி விளக்கம்

Friday, March 17, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ஒரே நாளில் ஒரு கோடி பார்வையாளர்களை பெற்று பெரும் சாதனை புரிந்தது. இதிலிருந்தே இந்த படத்திற்கு ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில் இந்த படத்தின் கிளைமாக்ஸ் குறித்து பல்வேறு வதந்திகள் உலவி வருகின்றனர். பாகுபலி முதல் பாகத்தின் மாபெரும் வெற்றி காரணமாக இரண்டாவது பாகத்தில் கதையில் மாற்றம் செய்யபப்ட்டிருப்பதாகவும், குறிப்பாக இந்த படத்தில் நான்கு கிளைமாக்ஸ்கள் உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

ஆனால் இவை அனைத்தையும் இயக்குனர் ராஜமெளலி மறுத்துள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்பு காரணமாக ஒரே ஒரு ஆக்சன் காட்சி மட்டும் திட்டமிட்டதை விட சில மாற்றங்கள் செய்ததாகவும் மற்றபடி படம் ஆரம்பிக்கும்போது திட்டமிட்டபடியே படம் உருவாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 'பாகுபலி 2' படத்தின் டிரைலரில் பாகுபலியை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்பதை தான் தெரிவிக்கவில்லை எனினும் படம் பார்ப்பவர்கள் 20 நிமிடங்களில் அந்த ரகசியத்தை தெரிந்துகொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.