close
Choose your channels

எஸ்.எஸ்.ராஜமவுலியின் ரூ.1000 கோடி பட்ஜெட் படத்தில் மகேஷ்பாபு?

Friday, October 2, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்திய திரையுலகில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படம் எஸ்.எஸ்.ராஜமவுலியின் 'பாகுபலி' என்றால் அது மிகையாகாது. உலகமே இந்த படத்தை பார்த்து வியந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அடுத்த படம் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளது. இந்திய இதிகாசங்களில் ஒன்றான 'மகாபாரதம்' மீது ராஜமவுலிக்கு பெரும் மரியாதை உண்டு. அந்த படத்தை மாபெரும் காவியமாக திரைப்படம் எடுக்க வேண்டும் என்பது அவரது கனவுகளில் ஒன்று.

ஆனால் தற்போது மகா பாரத்தின் கிளைக்கதைகளில் ஒன்றாகிய 'கருடா' குறித்து ராஜமவுலி ஒரு திரைப்படத்தை உருவாக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் பட்ஜெட் ரூ.1000 கோடி என்றும் கூறப்படுகிறது. இந்த படத்தில் எஸ்.எஸ்.ராஜமவுலியுடன் மகேஷ்பாபுவும் இணையவுள்ளதாக தெலுங்கு திரையுலகில் இருந்து கூறப்படுகிறது. இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அவர்களும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.