close
Choose your channels

'பாகுபலி' படம் குறித்து ராஜமெளலி கடைசியாக கூறியது இதுதான்

Friday, May 5, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியாவின் பிரமாண்ட திரைப்படமான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆகி தற்போது ரூ.1000 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இந்திய அளவில் பெரிய ஸ்டார் இல்லாத இந்த படம் வசூலில் புதிய சரித்திர சாதனை செய்ததற்கு முக்கிய காரணம், இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஐந்து வருட உழைப்பே என்பது அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.

இந்த நிலையில் தற்போது லண்டனில் குடும்பத்துடன் ஓய்வு எடுத்து வரும் ராஜமெளலி அங்கு நடந்த புரமோஷன் விழா ஒன்றில் கலந்து கொண்டார். இதுதான் இந்த படத்திற்கான கடைசி புரமோஷன் நிகழ்ச்சி என்றும், பாகுபலி தொடர் படத்தை பொருத்தவரையில் தன்னுடைய பணி முற்றிலும் முடிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் இந்த படத்தை வெற்றிப்படமாக்கிய ஒவ்வொருவருக்கும் தனது நன்றி என்றும் ராஜமெளலி தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் அனுஷ்கா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி பெரும் எமோஷனல் நிகழ்ச்சியாக இருந்ததாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.