close
Choose your channels

சட்டப்பேரவையில் இருந்து ஸ்டாலின் வெளியேற்றம். சட்டை கிழிந்திருந்ததால் பரபரப்பு

Saturday, February 18, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சபாநாயகரின் உத்தரவை அடுத்து திமுக உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டிருக்கும் நிலையில் சற்று முன்னர் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் இருந்து கிழிந்த சட்டை மற்றும் பட்டன்கள் இல்லாமல் வெளியே வரும் காட்சி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சபையில் இருந்து வெளியே வந்த மு,க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்த போது, 'சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்திருந்தால் அதற்கு நான் பொறுப்பு ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவித்து கொள்வதாக கூறி ரகசிய வாக்கெடுப்பு நடத்த சபாநாயகரிடம் வலியுறுத்தினேன். ஆனால் சபாநாயகர் எங்களுடைய கோரிக்கையை ஏற்காமல் வலுக்கட்டாயமாக காவலர்கள் மூலம் வெளியேற்றிவிட்டார். இன்று நடந்த ஜனநாயக படுகொலையை கவர்னருக்கு விளக்கமாக எடுத்துரைப்போம் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.